சிரிக்க...சில நிமிடம்.

வடிவேல்:சார்… ஆறு வருஷத்துல ‌நீ‌ங்க போ‌ட்ட பண‌ம் இர‌ட்டி‌ப்பாகு‌ம்னு                சொன்னீங்களே … என்னஆச்சு?
ரஜனி:இர‌ட்டி‌ப்பாகு‌ம்னு தானே சொன்னோம்.. திருப்பித் தர்றதா சொல்லலையே! 
…………………………………………………………….
டொக்ரர்:உப்பு, உரப்பு, காரமெல்லாம் கூடாது. அரைவேக்காடாவே சாப்பிடணும்...!
நோயாளி:"கல்யாணமானதுலேருந்து அப்படித்தானே டாக்டர் சாப்பிட்டு வாரேன்...!
………………………………………

நர்சு:ஏன் டாக்டர்... போஸ்ட் மார்ட்டமாவது ஒழுங்கா பண்ணக்கூடாதா...?
டொக்ரர்:ஏன் என்னாச்சு...?
நர்சு:சரியா உயிர் போகல போலேருக்கு. பாருங்க...  நீங்க போஸ்ட் மார்ட்டம் பண்ணினபேஷண்ட் எழுந்து நடந்து போறதை...?
……………………………………………………………………..
மனைவி:என்னங்க!நாங்க செத்துட்டா husband&wife தனியாத் தான் இருக்கவேனுமாமே!!!
கணவன்:அதனாலதாண்டி அது சொர்க்கம் எண்டு சொல்லுறாங்கள் .
மனைவி:....???????   
………………………………………………………………………
நோயாளி: டாக்டர்.வாய் நாறுது.
டாக்டர்:எப்போதிலிருந்து?
நோயாளி:நீங்கள் பேச ஆரம்பித்ததிலிருந்து
………………………………………………………………….
.மாணவன்:ஒன்றும் தெரியாத எனக்கு எக்ஸாம் நேரம் கேள்விப்   பேப்பரைத்தாறங்கள். எல்லாமே தெரிஞ்ச வாத்தியாரிட்டை answer பேப்பரைக்குடுக்கிறாங்கள்.என்ன கொடுமை சார் இது?
……………………………………………………………………….
மகள்:மம்மி,எனக்குத் தம்பிப் பாப்பா வேணும்.
அம்மா: உங்க டாடி துபாய் போயிருக்கிறார்.வந்த உடனே யோசிப்போம்.
மகள்:நோ மம்மி,டாடிக்கு நாம சர்ப்பரைஸ் குடுப்போம் மம்மி.
அம்மா:….!!!!!
……………………………………………………………………….
நோயாளி: டாக்டர்.நீங்கள் எனக்கு ஒரு காரியம் பண்ணவேணும்.
டாக்டர்:சொறி,ஒப்பிரேசன் மட்டும் தான் நான் பண்ணுவன்.காரியம் நீங்க ஐயரை வைச்சுத்தான் செய்யவேணும்.
……………………………………………….
மனைவி:என்னங்க..திடீரென்று பூகம்பம் வந்துதுங்கஅப்பிடியே நிலத்திலை விழுந்திட்டேன்.
கணவன்:நல்லா யோசிச்சுப் பாரு..பூகம்பம் வந்த பிறகு நீ நிலத்தில விழுந்தியா?இல்லை,நீவிழுந்த பிறகு பூகம்பம் வந்துதா?
……………………………………
டாக்டர்:உங்களுக்கு எப்போதிலிருந்து கை,கால் நடுக்கம் இருக்கிறது?
நோயாளி:என்ரை கலியாண நாளை மறந்திட்டன் டாக்டர்.
……………………………………………………………….
நோயாளி:ஒப்பிரேசன் பண்ணினா பிழைப்பேனா டாக்டர்?
டாக்டர்:நான் பிழைக்கிறதே ஒப்பிரேசன் பண்ணித்தானே!
……………………………………………………………
நோயாளி:வயித்துவலி தாங்க முடியலை டாக்டர். தற்கொலை பண்ணவேணும் போலைஇருக்கு.
டாக்டர்:அதுக்குத்தான் ஒப்பறேசனுக்கு தேதி குறிச்சாச்சே.அதுக்குள்ளே ஏன்அவசரப்படுறீங்க.

"தமிழரின் உணவு பழக்கங்கள்"-பகுதி: 23

"FOOD HABITS OF TAMILS" PART:23 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing" [தமிழிலும் ஆங்கிலத்திலும் / In English and Tamil]

 


சங்கத் தமிழரின் உணவு மரபை ஒரு இள மனைவியின் கதையாகவே கொடுக்கிறது கி மு 200 ஆண்டை சேர்ந்த குறுந்தொகை 167. “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல், கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக், குவளை யுண்கண் குய்ப்புகை கமழத், தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர், இனிதெனக் கணவ னுண்டலின், நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.” என்று.  மேலும் அந்த இளம் குடும்பப் பெண் தித்திக்கும் புளிச் சுவை நிறைந்த மோர்க் குழம்பை அல்லது புளிக் குழம்பை ஆக்குவதில் கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டை ஒவ்வொரு வரிகள் ஊடாகவும், அதே நேரம் அந்த உணவு ஆக்கும் முறையையும் நாம் அதில் அறிய முடிகிறது. தலைவனும் தலைவியும் பிறர் நன்கு அறியாத படி மறைவாக கண்டு காதல் கொண்டு, பெற்றோரின் சம்மதம் இன்றி, களவு மணம் செய்து இருவரும் தனிக் குடித்தனம் சென்றனர். துடித்துப் போனாள் மணப் பெண்ணின் தாய். பொறுப் பேதுமின்றி, செல்வச் செழிப்புடன், உலாவித் திரிந்தவளால் தனக் குடித்தனம் நடத்த முடியுமா? அடுப்பங்கரையே தெரியாதவள் எப்படி ஆக்கிப் போடுவாள்? அமைதி கொள்ள முடியாத தாய், தன் தோழியை அழைத்து மகளின் தனிக் குடித்தனத்தின் சிறப்பை கண்டு வருமாறு கேட்டுக் கொண்டாள். அதன் படி, எப்படி இல்லறம் நடத்துகிறாள் என்பதைப் பார்க்கப் போன செவிலிக்குக் கிடைத்த அருமையான காட்சி இங்கு கவிதையாகிறது.

 


தலைவன் வெளியே சென்று விட்டான், தன் தலைவனுக்காக உணவு ஆக்கும் பணியில் இறங்கினாள் அந்த இளம் தலைவி. முதல் காட்சியில் தலைவி சமையல் செய்கிறாள். நன்கு முற்றிய கட்டியாகியிருந்த தயிரை உறியிலிருந்து இறக்கி எடுத்து, அந்த கெட்டித் தயிரை தன் மெல்லிய விரல்களால் பிசைகிறாள்; அவ்வேளை, அவள் திடுமென எழுகிறாள். அப்பொழுது, அவள் அணிந்திருந்த சேலை நழுவி விட்டது. கை கழுவிப் பின் சேலையைச் செருகி மீண்டும் தயிரைத் தொட்டால் தயிரின் பதம் கெட்டு விடும் என்பதால், அது அழுக்காகி விடும் என்று தெரிந்தும், உடனே தயிர் பிசைந்த கையால் பற்றி ஆடையை உடுத்துக் கொள்கிறாள். நெய்யோடு கடுகு மிளகு என்பன இட்டுத் தாளித்துப் பின் பிசைந்த தயிர் ஊற்றி மோர்க் குழம்பு செய்தாக வேண்டும். அப்படி முறைப்படி  தாளிக்கும் போது, கடுகும் மிளகும் இன்ன பிறவும் நெய்யில் வதங்கிப் பொரிய, புகை பொங்கி எழுந்தது, கண்களில் புகை நிறைகிறது; எனினும் அதனை அவள் பொருட்­­டுத்­தாது கண்ணைக் கசக்கியபடி துழாவி துழாவி இத­மாகச் சமைத்தாள். தாளித்த [கறி] சட்டியை விட்டு அவள் விலகவே யில்லை. சற்றே விலகினாலும் சுவை மாறி விடும் என்பதால். இவ்வாறு புளிக் குழம்பு செய்து முடிக்கிறாள் தலைவி. அடுத்த காட்சியில் தலைவன் உண்டு கொண்டிருக்கிறான். ‘இனிது என்கிறான். தலைவியின் முகத்தில் சொல்ல முடியாத மிக நுட்பமான மகிழ்ச்சி பரவுகிறது. செவிலி வருணிக்கும் காட்சியில் கேட்கும் ஒரே பேச்சுக் குரல் தலைவன் சொன்ன “இனிது என்ற ஒற்றைச் சொல்தான். மற்றபடி இது அன்பினால் இயக்கப் பட்ட ஒரு மௌன நாடகம் ஆகும்.

 


தமிழில் எழுதப்பட்ட சமையல் நூல் ஒன்று சங்க காலத்தில் இருந்ததாக சிறுபாணாற்றுப்படை, வரிகள் 238 - 241, “கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப், பூ விரி கச்சைப் புகழோன் தன்முன், பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள், பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்," குறிப்பிடுகிறது. அதில், ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் [இவன் சங்ககால வள்ளல்களில் ஒருவன்] பாணர்களுக்கு விருந்து படைக்கும் போது இந்த நூலிலுள்ள முறைமை வழுவாமல் சமைக்கப் பட்ட உணவை இட்டானாம் என்கிறது. இந்த நூல் அருச்சுனனின் அண்ணன் வீமனால் எழுதப் பட்டதாம். ஆகவே இது வடமொழி நூலைத் தழுவியதாக இருக்கலாம். எனினும் இலக்கியத் தொகுப்பிற்கு முன்பாகவே இந்நூல் அழிந்து விட்டது போலும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமையல் தொடர்பாகத் தனித்துவமான ஒரு நூல் இருந்தது என்ற செய்தியால், நாம் அக்கால தமிழரின் உணவு மரபின் சிறப்பைக் காணக் கூடியதாக இருக்கிறது.

 


மேலும் அங்கு காணப்பட்ட உணவு மரபு வளர்ச்சியின் உன்னதமான நிலை, வீடுகள் தோறும் தனியாக ‘சமையலறை என்று ஒன்று அமைய காரணமாக இருந்திருக்க கூடும். அவற்றை அட்டில் என சங்க தமிழர் அழைத்தனர். அது மட்டுமா, மிக நுணுக்கமாக உணவருந்தும் முறைகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் பொருத்தமாக உணவு உண்ணும் பன்னிரெண்டு முறைகளை தந்துள்ளார்கள் என்பதும் அவர்களின் அக்கால உணவு மரபின் சிறப்பைக் காட்டுகின்றது.

 


அருந்துதல் - மிகச் சிறிய அளவு உட்கொள்ளல், உண்ணல் - தாராளமாக பசிதீர உட்கொள்ளல். உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு திரவத்தை உறிஞ்சி உட்கொள்ளல். குடித்தல் - திரவ உணவை (கஞ்சி போன்றவை) மெல்ல மெல்ல பசி போக்க  உட்கொள்ளல். தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல். துய்த்தல் - மகிழ்ந்து,சுவைத்து உட்கொள்ளுதல். நக்கல் - நாவினால் துலாவி உட்கொள்ளுதல். நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல். பருகல் -திரவிய பண்டத்தை சிறுகக் குடிப்பது. மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல். மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல். விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல் ஆகும்.

 

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 

 

பகுதி : 24 தொடரும்

 

"FOOD HABITS OF TAMILS" PART: 23

"Food Habits of Ancient Sangam Tamils continuing"

 

Kuzhambu (குழம்பு / curry), is a dish common in South Indian and Sri Lankan Tamil cuisines, and is a gravy based on a broth made with tamarind, urad (bean) dal and toor dal, and can include vegetables. The dish is very popular as a side for rice among Tamils. The number of varieties of kuzhambu are countless, one of which is a tamarind based gravy, puzhi kuzhambu, which people ate even 2200 years ago! It is a thick gravy with tamarind pulp. It has a tangy flavour combined with the special spices. We found this curry in Kurunthokai 167 [2nd century B.C], penned by Koodalur Kizhaar. The verse is situated in the forest regions of ‘Mullai’ and speaks in the voice of the lady’s foster-mother to the birth-mother, narrating events that transpired in the lady’s marital home. The verse opens with the words ‘முளி தயிர் பிசைந்த meaning ‘kneading well-set curd’ and talks about a well-known food item in Indian cuisine, known as ‘curd’ here, and goes by the alias of ‘yoghurt’ in an international scene, which purists will declare as different. Whatever that may be, here’s an evidence of the usage of curd, known for its probiotic wealth, in Sangam times. Next, the final dish being prepared appears in ‘தீம் புளிப் பாகர் meaning ‘sweet and sour gravy’.

 

What is really cooking in this verse? The context reveals that Hero & Heroine have fallen in love and without parents consent. They have eloped and married. After few days the girl's parents send the foster mother to check out if the girl is doing well & happy. The foster mother goes to her place and observes and reports back to their parents. So this situation usually results in poem of how the young girl has taken up responsibility of running the family and how she does really well even though she is young and used to luxurious conditions in her parents home. Here is the poem where the foster mother recounts her observations to Heroine’s mother.  “After kneading the thick curd with her flame-lily-like, soft fingers, as her well-washed attire slipped away, even without washing her fingers, she touched her attire and wore it. With her blue-lily-like, kohl-streaked eyes, filled with cooking smoke, she served the sweet and sour curry that she stirred on her own to her husband, who savouring it, declared it to be delicious. Hearing that, a subtle joy spread on that face, decked with a luminous forehead.” With these words, the foster-mother passes on the news to the birth-mother that their daughter is leading a happy life with her husband.

 

Sangam poem, Sirupanatruppadai, which were written by the poet Nathattanaar in praise of a minor Velir chieftain named Nalliyakkotan, a Naka king of Naka Nadu (ancient Malabar North Ceylon) - mentioned that there were cook book in Tamil during Sangam period, may be written based on sanskrit [sasktam] book, wrote by Bhima of mahabharata. It is also understand from Mahabharata that he is the first to have cooked a dish much loved in South India, Aviyal, which is a thick stew of vegetables, curd and coconut, While he served at the court of King Virata as disguise himself as a cook named Vallabha.

 

"He will serve you many different foods that have been created from cookbooks written by Bheeman with a chest like that of a snow-covered mountain, older brother of Arjunan who wears a

breast cloth with flower designs, famed for his archery skills, the one who received a quiver with arrows from the fire god after burning a forest." [Sirupanatruppadai: 238-241] It is surprised to understand that during the Sangam period or even before that every Tamilian houses had separate kitchen called attil [அட்டில்] and further We come to know from Sangam literature that ancient Tamilian consumed food or drink in twelve different ways. They are

 

Arunthuthal [அருந்துதல்] -  consuming very very little like medicine, Unnal [உண்ணல்] - eating, Urinchal [உறிஞ்சல்] - suction, Uudiththal [குடித்தல்] - Drinking, Thinral [தின்றல்] - eating, tuyttal [துய்த்தல்] - Eating anything with satisfaction or pleasure, Nakkal [நக்கல்] - Things eaten by licking, Nunkal [நுங்கல்] - devouring, parukal [பருகல்] - drinking, liquid food, maantal [மாந்தல்] - eating drinking, Mellal [மெல்லல்] - Mastication or chewing -food is crushed and ground by teeth and, vilunkal [விழுங்கல்] - deglutition

 

Thanks

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

 

PART : 24 WILL FOLLOW

நம் உடலுக்கு காபியின் தேவை என்ன? (உடல்நலம்)

அது அதிகரித்தாலும், குறைந்தாலும் என்ன ஆகும்?

மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையின் அடிப்படை பானமாக காபி உள்ளது. பதினைந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக மனித கலாச்சாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.

 

இந்த காபி எனும் பானம் 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் அறிவொளியைத் தூண்டியதாக சிலர் கூறுகின்றனர். இந்த நூற்றாண்டுகளில் தான் நவீன உலகின் பல அறிவுசார் மற்றும் கலாச்சார கருத்துக்களுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.

 

காபியின் உள்ள முக்கிய மூலப்பொருள் காஃபின் ஆகும், இது இப்போது உலகில் மிகவும் பரவலாக நுகரப்படும் பொருளாகக் கருதப்படுகிறது. நாம் எப்படி சிந்திக்கிறோம், உணர்கிறோம் என்பதை இது பாதிக்கிறது.

 

காபி எங்கிருந்து வந்தது?

காபி என்பது எத்தியோப்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட காஃபி அராபிகா எனும் செடியின் பழத்திலிருந்து முதலில் பெறப்பட்டது.

 

90%க்கும் அதிகமான காபி உற்பத்தி வளரும் நாடுகளில் தான் நடைபெறுகிறது, முக்கியமாக தென் அமெரிக்கா, வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவில்.

 

புராணக்கதை என்னவென்றால், 9-ஆம் நூற்றாண்டில் கால்டி என்ற ஆடு மேய்ப்பவர், தன் ஆடுகள் காபி பெர்ரிகளை உட்கொண்ட பிறகு அவற்றின் ஆற்றல் அளவு அதிகரித்ததைக் கண்டறிந்தார். இதனால் அவரும் அதை உட்கொள்ள முடிவு செய்தார்.

 

அப்போதிருந்து, உள்ளூர்வாசிகள் மசித்த காபி பீன்ஸை பயன்படுத்தத் தொடங்கினர் அல்லது அந்த தாவரத்தின் இலைகளிலிருந்து தேநீர் தயாரிக்கத் தொடங்கினர்.

 

14ஆம் நூற்றாண்டில் ஏமனில் வாழ்ந்த சூஃபிகள் தான் முதன்முதலில் காபி விதைகளை வறுத்து, இன்று நாம் அறிந்த பானத்தை உருவாக்கியதாக வரலாற்றுக் கணக்குகள் தெரிவிக்கின்றன.

 

15ஆம் நூற்றாண்டில், ஒட்டோமான் பேரரசு முழுவதும் காபி ஹவுஸ்கள் (Coffee house) தோன்றின. பின்னர் ஐரோப்பாவிற்கு இது பரவியது. அங்கு வணிகம், அரசியல் மற்றும் புதிய சிந்தனைகளின் மையமாக மாறியது காபி.

 

20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஜெர்மன் தத்துவஞானியும் சமூகவியலாளருமான ஜூர்கன் ஹேபர்மாஸ் போன்ற சில அறிஞர்கள், காபியின் தாக்கம் இல்லாமல் அறிவொளி இயக்கம் சாத்தியமாகியிருக்காது என்று கூட வாதிடுகின்றனர்.

 

ஹேபர்மாஸின் கூற்றுப்படி, 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் காபி ஹவுஸ்கள் 'விமர்சன மையங்களாக' மாறியது. அங்கு பொதுக் கருத்துகள் மற்றும் சிந்தனைகள் உருவாக்கப்பட்டன.

 

முக்கிய அறிவொளி இயக்க பிரமுகர்களும் இந்த பானத்தின் பெரும் ரசிகர்களாக இருந்ததாக நம்பப்படுகிறது.

 

பிரெஞ்சு தத்துவஞானி வால்டேர், ஒரு நாளைக்கு 72 கப் காபி வரை பருகினார். அதே நேரத்தில் அவரது நாட்டவரான டிடெரோட் தனது 28-தொகுதிகளைக் கொண்ட ‘என்சைக்ளோபீடியாவை தொகுக்க காபியை தான் நம்பியிருந்தார்.

 

இவரது என்சைக்ளோபீடியா தான் அறிவொளி இயக்கத்தின் கொள்கைப் படைப்பாகக் கருதப்படுகிறது என்று அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் பொல்லான் கூறுகிறார்.

 

அமெரிக்காவில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் காபி ஆய்வுகளுக்கான பிரிவின் தலைவர், மானுடவியல் பேராசிரியர் டெட் பிஷ்ஷர், "முதலாளித்துவத்தின் எழுச்சியில் காபியும் முக்கிய பங்கு வகித்தது" என்கிறார்.

 

அவர் பிபிசியிடம் பேசியபோது, "காபி வரலாற்றின் போக்கை மாற்றியது. அறிவொளி மற்றும் முதலாளித்துவத்திற்கு வழிவகுத்த சிந்தனைகளின் வளர்ச்சியை ஊக்குவித்தது.

 

ஜனநாயகம், பகுத்தறிவு, அனுபவவாதம், அறிவியல் மற்றும் முதலாளித்துவம் பற்றிய கருத்துக்கள், காபியின் நுகர்வு பிரபலமடைந்த நேரத்தில் வந்தது என்பது எனக்கு வெறும் விபத்தாகத் தெரியவில்லை. கருத்து மற்றும் செறிவை விரிவுபடுத்தும் இந்த பானம் நிச்சயமாக முதலாளித்துவத்திற்கு வழிவகுத்த சூழலின் ஒரு பகுதியாகும்" என்றார்.

 

அந்த காலத்தில், காபியை உற்பத்தித் திறனை அதிகரிக்கப் பயன்படுத்தலாம் என்பதை வணிகர்கள் உணர்ந்தனர். எனவே அவர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு காபியை வழங்கத் தொடங்கினர், இறுதியில் அவர்களுக்கு காபி இடைவேளை வழங்கும் வழக்கம் தோன்றியதுஎன்று கூறுகிறார் பிஷ்ஷர்.

 

காபி வரலாற்றின் இருண்ட பக்கங்கள்

பலரை அடிமைகளாக மாற்றி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதில் காபி முக்கிய பங்கு வகித்தது.

 

பிரெஞ்சுக்காரர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை வரவழைத்து ஹைட்டியின் தோட்டங்களில் அவர்களை பயன்படுத்தினர். 1800களின் முற்பகுதியில், உலகின் மூன்றில் ஒரு பங்கு காபியை ஆப்பிரிக்க அடிமைகளைப் பயன்படுத்தி பிரேசில் உற்பத்தி செய்து வந்தது.

 

இன்று, காபி உலகளாவிய கலாச்சாரத்தின் ஒரு முதன்மைக் கூறாக உள்ளது. தினசரி இரண்டு பில்லியன் கோப்பைகளுக்கு மேல் நுகரப்படுகிறது. ஆண்டுக்கு 90 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் (இந்திய மதிப்பில் 75 ஆயிரம் கோடி) தொழில்துறைக்கு பங்களிக்கிறது.

 

அப்படியிருந்தும், 600 ஆண்டுகளில் காபி தொழிலாளர்களின் நிலைமை அதிகம் மாறவில்லை என்கிறது சர்வதேச அளவில் வறுமை மற்றும் பசியை ஒழிக்க பாடுபடும் ஹெய்ஃபர் இன்டர்நேஷனல் எனும் என்ஜிஓ.

 

காபி தொழில்துறையின் முதுகெலும்பாக அடித்தட்டு மக்கள் இருக்கிறார்கள், குறைந்த கூலிக்காக வேலை செய்கிறார்கள் என்று அந்த அமைப்பு கூறுகிறது. 50 நாடுகளில், 125 மில்லியன் மக்கள் வாழ்வாதாரத்திற்காக காபியை நம்பியுள்ளனர், அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் வாழ்கின்றனர்.

 

காபி உடலில் தாக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?

காஃபின் உட்கொண்டவுடன், செரிமான அமைப்பு வழியாகச் சென்று குடல் வழியாக இரத்த ஓட்டத்தில் அது உறிஞ்சப்படுகிறது. இருப்பினும், அதன் பாதிப்பு நரம்பு மண்டலத்தை அடைந்தவுடன் மட்டுமே தொடங்குகிறது.

 

உடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் பொருளான அடினோசினுடன் காஃபினுக்கு இருக்கும் இரசாயன ஒற்றுமை காரணமாக இது நடக்கிறது. அடினோசின் பொதுவாக தன்னியக்க நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை தளர்த்துகிறது, இதய துடிப்பு குறைவதற்கு வழிவகுக்கிறது. தூக்கம் மற்றும் தளர்வு உணர்வுகளை தூண்டுகிறது.

 

காஃபின் நரம்பு செல்களின் மேற்பரப்பில் அமைந்துள்ள அடினோசின் ஏற்பிகளுடன் பிணைப்பை ஏற்படுத்துகிறது, இது ஒரு பூட்டுக்குள் சாவியைப் பொருத்துவது போல. ஆனால் இந்த ஏற்பிகளைத் தடுப்பதன் மூலம், அது ஒரு எதிர்விளைவை உருவாக்குகிறது.

 

இது இரத்த அழுத்தத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கலாம், மூளையின் செயல்பாட்டைத் தூண்டலாம், பசி உணர்வைக் குறைக்கலாம் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்தலாம். இதன் மூலம் நீண்ட நேரத்திற்கு கவனச் சிதறல் இல்லாமல் இருக்கலாம்.

 

மனநிலை மேம்பாடு, சோர்வு குறைப்பு மற்றும் மேம்பட்ட உடல் செயல்திறன் ஆகியவற்றிலும் காஃபினுக்கு முக்கிய பங்கு உள்ளது. சில நேரங்களில் விளையாட்டு வீரர்கள் இதை ஒரு ஊட்டச்சத்துக் குறைநிரப்பியாக பயன்படுத்துகின்றனர்.

 

காஃபினின் பாதிப்புகள் 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும். உட்கொண்ட ஐந்து முதல் 10 மணி நேரத்திற்குப் பிறகு உடல் காஃபினை வெளியேற்றிவிடும், ஆனால் அதன் பக்க விளைவுகள் நீண்ட காலத்திற்கு இருக்கும்.

 

உடலில் காஃபின் நன்மைகளை அதிகரிக்க, அதை மிதமாக உட்கொள்ள நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும், காலை முதல் கப் காபியை பருகும் போது உண்டாகும் காஃபின் தாக்கத்தைப் பாதுகாக்க, மதியம் காபி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.

 

ஆரோக்கியமான பெரியவர்களுக்கு தினசரி காஃபின் வரம்பு 400 மில்லிகிராம் என வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன, இது நான்கு அல்லது ஐந்து கப் காபிக்கு சமம்.

 

இந்த வரம்பை மீறுவது தூக்கமின்மை, பதட்டம், இதயத் துடிப்பு மிகைப்பு, வயிற்று அசௌகரியம், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

 

1,200 மில்லிகிராம் காஃபின் - சுமார் 12 கப் காபியை விரைவாக உட்கொள்வதன் மூலம் வலிப்புத்தாக்கங்கள் போன்ற மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 

இருப்பினும் மிதமான அளவில் குடிப்பதால், காபி சாத்தியமான ஆரோக்கிய நலன்களை வழங்குவதாகக் கருதப்படுகிறது. மரணம் மற்றும் பல நோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் காஃபினுக்கு பங்குள்ளது என்று ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தின் மருத்துவர் மேட்டியாஸ் ஹென் கூறுகிறார்.

 

"ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஐந்து கப் காபி வரை குடிப்பது இறப்பு அபாயத்தைக் குறைக்கும். அதேபோல நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் அதற்கு பங்குண்டு" என்கிறார் மருத்துவர் மேட்டியாஸ் ஹென்.

 

எனவே அடுத்த முறை ஒரு கப் காபியை பருகும்போது, ​​​அதற்கு பின்னால் இருக்கும் வரலாற்றையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

 

[- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.]