Scan Mobiles-Apps

Scan to Download Google AppDownload Android AppScan to Download Apple App

Quote of the Day

எனக்கு ஒரு மீன் கொடுத்தால் நான் ஒரு நாள் சாப்பிடுவேன். மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள், நான் வாழ்நாள் முழுவதும் சாப்பிடுவேன். - சீன பழமொழி

Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
Pickering new developing area.
  • 9
  • 9
  • 10
Added article  
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் தனது 79 வயதில் அவர் காலமாகினார்.உலகின் மிகப் பிரபலமான டைட்டானிக் மற்றும் லோர்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஆகிய படங்களில் இவரது சிறப்பான நடிப்பு உலகம் முழுவதும் பேசப்பட்டது.
  • 42
Added a news  
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர், லோகன் ரத்வத்தே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இயன்றவரை ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (04) நடைபெற்ற மகாவலி குடியிருப்பாளர்களுக்கு உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்."எனது வாழ்நாளில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட ஒருவன் நான். உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை. இருப்பினும், இன்று உங்கள் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.""எங்கள் கட்சியிலும் எங்கள் தவறுகள் உள்ளன ... அரசாங்கத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியாத போது நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டீர்கள்." “இன்று ஜனாதிபதி வேட்பாளர்களாக பலர்.. வாய் சாவால் விடுபவர்கள் இந்த நாட்டில் ஒரு வடிகானை கூட அமைக்கவில்லை. அதனால் தான் இந்த நாட்டை மீண்டும் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதியிடம் கேட்கின்றோம். தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எனது சிறந்த ஆதரவைத் தருகிறேன்." என்றார்.
  • 44
Added a news  
சீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகிவிட்டதால், அந்த நாடுகளால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது முறையாகவும் போட்டியிடும் அமெரிக்க ஜனாதிபதி, வொஷிங்டன்னில் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.சீனா ஏன் பொருளாதாரத்தில் மோசமடைந்துள்ளமைக்கும், ஜப்பான் ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் தடுமாறுவதற்கும் அவர்களின் இனவெறியே காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
  • 47
Added a news  
கனடாவில் மீன்பிடியில் ஈடுபட்ட மூவருக்கு 16700 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த இருவருக்கும் டெக்ஸாஸைச் சேர்ந்த ஒருவருக்கும் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோதமான முறையில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த மூவரும் மீன்பிடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடமேற்கு ஒன்றாரியோவின் கிரால்டான் பகுதியில் இந்த மூவரும் சட்டவிரோதமாக மீன்பிடித்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.மீன்பிடிப்பது தொடர்பிலான வரையறைகளை மீறி மூன்று பேரும் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மூவருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
  • 49
Added a news  
ஆசிய பிராந்திய நாடுகளை பாதித்துள்ள அதிக வெப்பம் காரணமாக கிழக்கு இந்திய மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளனர்.கிழக்கு இந்தியாவில் கடந்த 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான மிக அதிகளவான வெப்பநிலை இந்த ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.இந்தியாவை பாதித்துள்ள இந்த வெயிலின் தாக்கத்தால், இதுவரை 9 பேர் உயிரிழந்தனர்.பங்களாதேஷிலும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பமான வானிலை பதிவாகியுள்ளதுடன் 7 தசாப்தங்களின் பின்னர் நாட்டை பாதித்த மிக மோசமான வெப்ப அலை வானிலையாக இது பதிவுகியுள்ளது.தாய்லாந்திலும் தற்போது அதிகளான வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், அதன் தாக்கத்தினால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன
  • 49
  • 165
  • 166
  • 179
காலை வணக்கம்
  • 179
Added a post  
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, சித்திரை மாதம் 22 ஆம் தேதி மேஷம் -ராசி: அரசு பணிகளில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் புதிய அனுபவம் கிடைக்கும். ரகசியமான சில செயல்களில் ஆர்வம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பச்சைரிஷபம் ராசி: தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான செயல்களில் தெளிவு பிறக்கும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்மிதுனம் -ராசி: எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபாரம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். பக்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மை கடகம் -ராசி: நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற மதிப்பு கிடைக்கும். ஆசைகள் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு சிம்மம் -ராசி:பணிகளில் மாறுபட்ட சூழல் உண்டாகும். கடன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். தம்பதிகளுக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வியாபாரம் சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் இருக்கவும். எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் ஏற்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் அலைச்சல் உண்டாகும். புதிய நபர்களிடம் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். அனுபவம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம் கன்னி -ராசி: மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். பூர்வீகம் சார்ந்த சில பிரச்சனைகள் குறையும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பம் ஏற்படும். சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சாம்பல்துலாம் -ராசி: ஆரோக்கியம் தொடர்பான சில பிரச்சனைகள் குறையும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மனை மீதான கடன் உதவி கிடைக்கும். சிந்தனை போக்கில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்விருச்சிகம்- ராசி: உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பம் ஏற்படும். கல்வியில் ஆர்வமின்மை ஏற்பட்டு நீங்கும். சுபசெலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் தனுசு -ராசி: புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தாரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எழுத்துத் துறைகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் மகரம் -ராசி:மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். மறைமுகமாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள். வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம்கும்பம் –ராசி:எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதி அளிக்கும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சாம்பல் மீனம் -ராசி: சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். அனுகூலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 247
Added a post  
ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5.5.2024சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று மாலை 03.43 துவாதசி. பின்னர் திரியோதசி. இன்று மாலை 06.08 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. பூசம்ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 236
Added a post  
கடவுள் ஒருமுறை பூமி வந்து,கழுதையைப் படைத்து, நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.இதற்கு கழுதை சொன்னது“நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்.”கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்“நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்.”இதற்கு நாய் கூறியது,“கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்”கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்“நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்.”இதற்கு குரங்கு கூறியது “20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்”கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார்.கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் ” நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்.”இதற்கு மனிதன் கூறினான் “20 வருஷம் ரொம்ப குறைவு.கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு”கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.அன்று முதல் ........ மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்சம் மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.வயதாகி, ஓய்வு பெற்ற பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்­கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணிக்கின்றான்.
  • 246
Added a post  
மணி! நம்ம வீட்டுல குடியிருக்கிறவங்க அடுத்தவாரம் வீட்டைக் காலி பண்ணிடுவாங்க. வேற ஆள் யாராவது இருந்தா கூட்டிட்டு வாப்பா!” வீட்டு புரோக்கர் மணியின் கடைக்குள் ஏறி வந்த பழனியப்பன் சொன்னார்.கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பழனியப்பனின் வீட்டு மாடி போர்ஷனுக்கு வாடகைக்கு ஆள் கூட்டி வருவது மணிதான். பழனியப்பனின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இதுவரை ஐந்து குடும் பங்களுக்கு மேல் வாடகைக்கு வந்து போய் விட்டார்கள்.அதுக்கென்னங்கய்யா… பார்த்துட்டாப் போச்சு. இந்தப் பத்து வருஷத்துல எத்தனை பேரை கூட்டிட்டு வந்திருக் கிறேன். யாராவது எந்தப் பிரச்சனையாவது பண்ணினாங்களா? சரிங்க ஐயா… வாடகை ஏதாச்சும் ஏத்தியிருக்கீங்களா… இல்ல அதே எட்டாயிரம்தானா?” தன் பங்குக்குக் கேட்டான் மணி.“வாடகை என்ன வாடகை? அது பார்த்துக்கலாம்… ஆனா ஒரு கண்டிஷன்…” பழனியப்பன் சொல்லி முடிக்கவில்லை…அதான் தெரியுமேய்யா. வாடகைக்கு வர்றவர் சின்ன வயசா இருக்கணும். பேங்க் அல்லது கவர்மென்ட் வேலையா இருக்கணும். அப்பதான் ரெண்டு வருஷத்துல டிரான்ஸ்பராகி வீட்டைக் காலி பண்ணுவாங்க. குடும்பத்துல நாலு பேருக்கு மேல இருக்கக்கூடாது. முக்கியமா வயசானவங்க யாரும் இருக்கக்கூடாது அதானே? ” - கேட்டான் மணி.இல்லே மணி! நான் இத்தனை வருஷமா அப்படி கண்டிஷன் போட்டு எத்தனையோ வயசானவங்களை அவங்க பிள்ளைங்ககிட்டேயிருந்து பிரிச்சுட்டேன். அந்தப் பாவமோ என்னவோ, என் ரெண்டு பிள்ளைகளும் எங்களைத் தனியா விட்டுட்டு வெளிநாட்டுல செட்டிலாகிட்டாங்க.இப்போ வாடகைக்கு வரப்போற குடும்பத்துல பெரியவங்க இருந்தா எனக்கும் என் மனைவிக்கும் சகலத்துலயும் துணையா இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதனால வாடகைக்கு வர்ற குடும்பத்துல வயசானவங்க இருக்கணும். அதான் கண்டிஷன்....... வாடகையைக்கூட குறைச்சுக்கலாம்!” சற்று தழு தழுத்த குரலில் சொல்லிவிட்டு இறங்கிச் சென்றார் பழனியப்பன்.
  • 261
Good Morning...
  • 261
Added a news  
அமெரிக்காவைச் சேர்ந்த பிரஸ்தி என்ற நர்ஸ் உயிரிழக்கும் அளவுக்கு இன்சுலின் செலுத்தி 17க்கும் மேற்பட்ட நீரிழிவு நோய் இல்லாத நோயாளிகளை கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த குற்றச்சாட்டு குறித்து வழக்கு பதிவு செய்து அமெரிக்க போலீசார் விசாரணை செய்த நிலையில் நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு இன்சுலின் செலுத்தி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு மூன்று ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது மட்டுமின்றி 380 முதல் 760 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மன அழுத்தம் காரணமாக நோயாளிகளிடமும் மற்றவர்களிடம் எப்போதும் கோபமாக நடந்து கொண்டு அதிக டோஸ் இன்சுலினை செலுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் என்றும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • 361
Added article  
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் இந்திய அளவில் ஹிட் ஆனது.கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா, சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் லட்சக்கணக்கில் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
  • 340
Added article  
முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும் சிக்கல் துவங்கியுள்ளது.  இதற்கு ஒரு புதிய தீர்வாக உருவாக்கப்பட்டுள்ளது தான் ‘ஓடிடி பிளஸ்’ என்கிற புதிய ஓடிடி தளம். அதே சமயம் இதன் பெயருக்கு ஏற்றபடி தன்னுள் இன்னும் சில ஓடிடி தளங்களை ஒன்றிணைத்து இந்த ‘ஓடிடி பிளஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இயக்குநர்களாக எம்.ஆர் சீனிவாசன், சுதாகர் மற்றும் கேபிள் சங்கர் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர்.இந்த ‘ஓடிடி பிளஸ்’ துவக்க விழாவும் இதில் ஒளிபரப்பாகின்ற ‘ஃபெமினிஸ்ட்’ என்கிற வெப் சீரிஸின் முதல் பாகம் மற்றும் ‘சென்டென்ஸ்’ என்கிற குறும்படம் ஆகியவற்றின் திரையிடல் சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபிள் நடைபெற்றது.  மேலும் அடுத்தடுத்து இந்த ‘ஓடிடி பிளஸ்’-ல் இடம் பெற இருக்கும் படைப்புகளின் ட்ரெய்லர்களும் திரையிடப்பட்டன. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனுராமசாமி கலந்து கொண்டார். இயக்குநர் சீனுராமசாமி பேசும்போது,  “இந்த ஓடிடி பிளஸ் தளம் எதிர்காலத்தில் உருவாகும் புதிய படைப்பாளர்களுக்கு நல்லதொரு வரப்பிரசாதமாக இருக்கும்” என்று கூறினார்.
  • 354
Added a news  
கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் 10 நாட்களுக்கும் மேலாக சராசரியாக 103 டிகிரி என்ற அளவில் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் கோவை நெடுஞ்சாலை கவுண்டம்பாளையம்-கண்ணப்ப நகர் சந்திப்பு பகுதியில் கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் சார்பில் தற்காலிக கூரையானது அமைக்கப்பட்டுள்ளது. பச்சை நிற துணியால் சுமார் 15 மீட்டர் நீளத்திற்கு சாலையின் ஒரு பகுதியில் இந்த கூரை அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து சிக்னலில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.கடுமையான சுட்டெரிக்கும் வெயிலில் வாகனத்தை ஓட்டி வருபவர்கள் சிக்னலில் நிற்கும் பொழுது அதிக அளவிலான வெப்பத்தின் தாக்குதலுக்கு ஆளாகும் சூழலில் தற்போது மாநகராட்சி சார்பில் கோவையில் அமைக்கப்பட்டுள்ள முதல் நிழற்குடை இது என்னும் நிலையில் இதே போன்று அனைத்து சிக்னல்களிலும் அமைக்கும் பட்சத்தில் மிகவும் பயனுள்ளதாக அமையும் என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.இதை மற்ற ஊர்களிலும் பின்பற்றலாமே?
  • 360
Added a news  
அமேதி மற்றும் ரேபேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் அதில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடும் நிலையில் தற்போது ரேபேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கிஷோர் லால் சர்மா போட்டியிடுவதாகவும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அமேதி தொகுதியில் பாஜக சார்பில் அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் சார்பாக கிஷோர் லால் சர்மா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த இரண்டு அமேதி, ரேபேலி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்ற நிலையில் கடைசி நாளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் ஆச்சரியமாக அமைதி தொகுதிக்கு பதிலாக ரேபேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • 351
  • 350
Added article  
தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் சாதனை படித்தவர் சுஜாதா. இவர் 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் தெல்லிப்பழை என்ற ஊரில் பிறந்தார். இவர் இளம் வயதிலேயே கேரளாவை தன்னுடைய பூர்வீகமாக மாற்றிக்கொண்டார்கள். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார். அந்த காலத்திலேயே இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் சென்று பணியாற்றி வருவார்கள். அதில் சுஜாதாவின் தந்தை மேனன் கேரளத்திலிருந்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் விலங்கியல் ஆசிரியராக பணிபுரிந்து இருந்தார். பின்னர் இலங்கையின் தென்பகுதியில் உள்ள காலியில் பணியாற்றினார். சுஜாதாவும் அங்கு பத்தாம் வகுப்பு வரை படித்தார். பிறகு 11-ஆம் வகுப்பு தொடங்கும் போது கேரளாவில் வந்து செட்டிலாகி விட்டார்கள்.மேலும் சுஜாதா அவர்கள் 1977 ஆம் ஆண்டில் ஜெயகர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள். சுஜாதா ‘போலீஸ் ஸ்டேஷன்’ என்ற மலையாள நாடகத்தில் தான் முதன்முதலாக நடித்தார். அந்த நாடகத்தின் மூலம் அவருக்கு ‘தபஷ்வினி’ என்ற மலையாள படத்தில் சுஜாதா அறிமுகமானார். 300 படங்களுக்கு மேல் நடித்த சுஜாதா : மேலும் அவரின் நடிப்பை பார்த்து கே. பாலச்சந்தர் அவர்கள் 1977ம் ஆண்டு “அவள் ஒரு தொடர்கதை” என்ற படத்தில் முதன்முதலாக தமிழில் அறிமுகனார். அந்த படம் மகத்தான அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சுஜாதா தமிழ் திரைப்பட உலகில் பிரபலமானர். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாகவும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் சிவாஜி கணேசன், முத்துராமன், சிவகுமார், ரஜினிகாந்த், கமலஹாசன், நாகேஸ்வரராவ், சோபன்பாபு, சிரஞ்சீவி, மோகன் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். இடையில் இவர் என்ன ஆனார் என்பது கூட பலருக்கும் தெரியவில்லை. மேலும், சுஜிதா பெரிதாக பேட்டிகளை கொடுத்தது இல்லை. பொது நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொண்டது இல்லை. இறுதியாக சிவாஜி கனேசன் இறப்பின் போது அவரது கடைசி ஊர்வலத்தில் மனோரம்மாவின் கையை பிடித்தபடி நடந்து சென்றார்.  சுஜாதாவின் மரணம் : அது தான் சுஜாதாவை இறுதியாக பொது இடத்தில் பார்த்தது. அதன் பின்னர் அவரை எந்த ஒரு நிகழ்விலும் காண முடியவில்லை. இவர் ‘வரலாறு’ படத்தில் அஜித் குமாரின் அம்மாவாக நடித்தது தான் அவருடைய கடைசி படம். அதற்கு அப்புறம் அவர் எந்த படமும் நடிக்கவில்லை என்றும் தெரியவந்தது. சில வருடங்களுக்கு முன்னால் இவருக்கு இருந்த இருத நோயால் பாதிக்கப்பட்டு அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. மேலும் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் அகாலமரணம் அடைந்தார்.
  • 353
Added a post  
நியூயார்க்கில் மாநகரில், ஒரு தமிழரும் , அமெரிக்கரும் சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர்.அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர்.அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து தமிழனிடம் காட்டி“நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன் பார்த்தியா?”என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல், “உன்னால இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா?” என்று சவால் வேறு விட்டார் . தமிழனிடம் .விடுவாரா நம்ம தமிழன் “உள்ள வா… உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னனு காட்டுறேன்னு”, சொல்லி அமெரிக்கரை சாக்லெட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்.விற்பனை கவுன்டரில் இருந்தவரிடம் சென்ற தமிழன் கேட்டார், ஒரு மேஜிக் காட்டுறேன் பார்க்கிறியா?..கடைக்காரரும் சரியென்று தலையாட்ட, கவுண்டரில் இருந்து 1 சாக்லெட் பார் எடுத்து, அதனை தின்று முடித்தார்.அடுத்து இன்னொரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று தீர்த்தார்.பிறகு 3 வதாக ஒரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று முடித்துவிட்டு கவுன்டரில் இருந்த கடைக்காரரை ஏறிட்டுப் பார்த்தார்.கவுன்டரில் இருந்தவர், ” எல்லாம் சரி. இதில் மேஜிக் எங்கே இருக்கிறது?.”தமிழன் அமைதியாக பதில் அளித்தார், ”என்.ஃப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப்பாரு… நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் இருக்கும்…’
  • 380
Added a post  
போலி சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், போலி வைத்திய நிலையங்களை நடத்தும் நபர்களை கைது செய்வதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இலச்சினையுடன் கூடிய ஸ்டிக்கரை வாகனங்களில் தவறாக பயன்படுத்துவோர் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர், நெடுஞ்சாலையில் போலி சான்றிதழ்களை வழங்குவது, இலவச மருந்துகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் காவல்துறையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.போலி சான்றிதழ்களை வழங்கி வைத்தியர்களாக நடித்து மருத்துவ நிலையங்களை நடத்துபவர்கள் மற்றும் வைத்தியர்கள் போல் வேடமணிந்து சில சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.000
  • 489
Added a post  
நாடாளுமன்றம் எதிர்வரும் 07 ஆம் திகதிமுதல் 10ஆம் திகதிவரை கூடவிருப்பதாகப் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, எதிர்வரும் 07 ஆம் திகதி மு.ப 9.30 நாடாளுமன்றம் கூடவிருப்பதுடன் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.அதேநாளன்று மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பிரிவிடல் திருத்தச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, பராட்டே சட்டத்தை 2024 டிசம்பர் 15ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்ககப்படுகிறமை குறிப்பிடத்தக்கது00
  • 500
Added a post  
2007 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்த அனைவரும் தமது பெயர் வாக்காளர் இடாப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதா? என்பதை பரீட்சித்து பார்க்குமாறும் அவ்வாறு தமது பெயர் வாக்காளர் இடாப்பில் உள்வாங்கப்படாவிடின் உடனடியாக பதிவு செய்யுமாறும்  அறிவுறுத்திதப்பட்டுள்ளதுஇது தொடர்பாக https://ec.lk/vrd என்ற இணையத்தளத்தினூடாகவோ அல்லது கிராம அலுவலரினூடாகவோ அறிய முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுமேலும்’- “வாக்களித்தல் தனிமனித ஜனநாயக உரிமையாகும். ஆகையால் கிராம அலுவலர்களினூடாக வாக்காளர் பதிவு முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பதிவு வாக்களித்தலுடன் மாத்திரமின்றி, அதற்கப்பால் பல நன்மைகளை கொண்டுள்ளதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பதிவை உறுதிப்படுத்தல், நேர்முகத் தேர்வு, தொழில் பெறுதல், பாடசாலைகளுக்கு பிள்ளைகளை இணைத்தல் உள்ளிட்ட தேவைகளுக்கு வாக்காளர் பதிவு இன்றியமையாததாகும்.அந்த வகையில் 2007 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்த அனைவரும் வாக்குரிமைக்கு உரித்தானவர்களாகையாலும், அடுத்து வரும் காலத்தில் பல தேர்தல்கள் நடைபெறவிருப்பதாலும், வாக்குரிமையை பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிட்டுவதாலும், தாம் வாக்களிப்பதற்கான தகுதியை பெற்றுள்ளதை உடனடியாக அறிவதும் அதை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும் எனவும் இவ்விடயத்தில் அக்கறையீனமாக இருக்க வேண்டாம்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 481