Scan Mobiles-Apps

Scan to Download Google AppDownload Android AppScan to Download Apple App

Quote of the Day

பழமொழி

"வெள்ளைக்கில்லை கள்ளச் சிந்தை"

Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
Added a post  
அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ன்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.இதன்போது ஏமாற்றாதே ஏமாற்றாதே பட்டதாரிகளை ஏமாற்றாதே, வேண்டும் வேண்டும் வேலை வேலை வேண்டும், நாசம் நாசம் கனவுகள் நாசம் உள்ளிட்ட பல்வேறு கோகங்களை எழுப்பியிருத்தனர்.இதனைத் தொடர்ந்து நீண்ட காலமாக வேலையில்லாமல் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பாதிப்புக்களை சுட்டிக்காட்டி தமக்கான வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஐனாதிபதிக்கு மகஜர் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளானர்.அதே போன்று இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்  அந்த மகஜரின் பிரதிகளை அனுப்பி வைக்க உள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் தெரிவிதிருந்தமை குறிப்பிடத்தக்கது000
  • 19
Added a post  
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலோ அல்லது இந்த வருடத்தின் இறுதியிலோ அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முறையாக நீக்குவதன் மூலம், வரி வருமான இலக்குகள் கணிசமான அளவு அதிகரிக்கும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.எனினும், இது தொடர்பில் இதுவரையில் இறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.இந்த நிலையில், நாட்டுக்குப் பொருத்தமற்ற வாகனங்களைக் கொள்வனவு செய்தமையே வாகன இறக்குமதிக்கானத் தடைக்கு காரணமாகும் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.இலங்கை போன்ற நாடுகளுக்கு குறைந்த விலையில் சிறந்த வாகனங்களைக் கொள்வனவு செய்யலாம். அவ்வாறு இடம்பெறாமையே இங்கு பிரச்சினையாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.2018, 2019 ஆகிய ஆண்டுகளில் நாட்டுக்கு, பாவனை செய்யப்பட்ட வாகனங்களே பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றிலும் ஜப்பானிலிருந்தே அதிகளவான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.அதேநேரம் ஜப்பான் வாகனங்களே தரத்தில் சிறந்தவை. அவற்றை குறைந்த விலைகளோடு தரமான வாகனங்களை இறக்குமதி செய்யலாம்.இவ்வாறான பின்னணியில் சில வாகன இறக்குமதியாளர்கள் வாகனங்களின் திருத்தப் பணிகளுக்காக அதிக பணத்தைச் செலவிடுவதாகத் தெரிவிக்கின்றனர்.ஆகையால் வாகனத்தின் விலை அதிகரிப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுவதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், உரிய முறையில் குறைந்த விலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பல சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.எனினும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முறையான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தவறுவதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 19
Added a post  
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பில், அதிகபடியாக ருதுராஜ் கெய்க்வாட் 98 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.இந்நிலையில், 213 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது000
  • 18
Added a post  
பொருளாதார நெருக்கடி காரணமாக உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாமல், பல்வேறு நோய் நிலைமைகளுக்கு ஆளாகி மனநல பிரச்சினைகள் அதிகரிப்பது போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல இதனைத் தெரிவித்துள்ளார்.கறிப்பாக 2000 ஆம் ஆண்டில், நாட்டில் ஆண்டு சராசரி இறப்பு எண்ணிக்கை 140,000ஆக காணப்பட்டது. அந்த எண்ணிக்கை தற்போது, 180,000ஆக அதிகரித்துள்ளது.நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.2020ஆம் ஆண்டளவில், நாட்டில் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை சுமார் 325,000ஆக காணப்பட்டது. இந்த நிலையில், அந்த தொகை தற்போது 280,000 வரை வீழ்ச்சிடைந்துள்ளது.இதேவேளை, பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக பிரச்சினைகள் காரணமாக இளைஞர் யுவதிகள் விவாகரத்து செய்து கொள்ளும் நிலைமை அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல குறிப்பிட்டுள்ளார்.000
  • 18
Added a post  
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகள் நாளை(30) நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.ஏப்ரல் 30 ஆம் திகதிமுதல் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் முடியும் வரை பரீட்சைக்குத் தயார்படுத்தும் அனைத்துப் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்தத் தடை நாளை 30ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் மே 15 வரை அமுலில் இருக்கும். , மேலும் இந்த உத்தரவை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 19
Added a post  
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4,532 டெங்கு நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 1,936 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 19
Added a post  
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகவும், எனினும் ஜூன் மாத இறுதியில் இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுடனான விசேட சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஆனால் இதற்கு முன்னதாக முடிவை மே மாத நடுப்பகுதியில் தெரிவிக்க ஜனாதிபதி திட்டமிடப்பட்ட போதிலும் அதனை பிற்போடவுள்ளார் என தெரியவந்துள்ளது.ஜனாதிபதி வேட்புமனுத் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானம் அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என இந்தக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்டது. இங்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.பிரதமர் தினேஸ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால, ஹரின் பெர்னாண்டோ, காஞ்சன விஜேசேகர, அனுர யாப்பா உள்ளிட்ட சிரேஷ்ட அமைச்சர்கள் குழு ரணில்-பசில் சந்திப்பின் பின்னர் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பில் தலைவர்கள் இருவரையும் சந்தித்துள்ளது.வேட்புமனு தாக்கலின் பின்னர் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை அரசாங்கம் வழங்குவது சிக்கலாக இருக்கும் என்பதாலேயே ஜனாதிபதியின் வேட்புமனுத் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது000
  • 19
Added a post  
உழைக்கும் ஒவ்வொருவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன கிடைக்கும் வகையில் பிரேரணை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.அதன் பின்னரே தொழிலாளி என்ற பெயர் நீக்கப்பட்டு கௌரவமான வேலைக்கான உரிமையை பெற்றுக்கொடுக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.எதிர்வரும் மே மாதத்தின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூர் மற்றும் தேசிய தலைவர்கள் உட்பட பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் உள்ள சந்தேகம் காரணமாக நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய விரும்பாத போதிலும், பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்கள் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்து.000
  • 19
Added a post  
தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்ற போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இது தொடர்பான நேர்முகத்தேர்வுகள் எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி வரை இசுருபாய கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 20
Added a post  
சீனா தனது வெளிநாட்டு முதலீடுகளைப் பயன்படுத்தி இலங்கையில்ஒன்று அல்லது இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஆய்வை சினோபெக் ஜூன் மாதம் முடிக்க உள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன..சீன நிறுவனம் இலங்கையின் அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை உருவாக்கி இயக்கி வருகிறது.இலங்கை நாளொன்றுக்கு சுமார் 38,000 பீப்பாய்கள் பதப்படுத்தும் திறன் கொண்ட1960 களில் ஈரான் நாட்டினால் அமைக்கப்பட்ட ஒரே ஒரு சுத்திகரிப்பு ஆலையை கொண்டிருக்கிறது.இந்நிலையில் இந்தியாவும் சீனாவும் இலங்கையில் எரிசக்தி ஆற்றலை அதிகரிக்க போட்டியிடுகின்றன.சீனாவினால் நடத்தப்படும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 160,000 பீப்பாய் பதப்படுத்தும் திறன்கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதா? அல்லது இரண்டு 100,000 பீப்பாய் பதப்படுத்தும் திறன் கொண்ட வசதிகளை உருவாக்குவதா என்பது குறித்த அதன் சாத்தியக்கூறு ஆய்வை சினோபெக் நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.இலங்கையில் சுத்திகரிப்புத் திட்டம் என்பது சீன மற்றும் உலகளாவிய சுத்திகரிப்பு நிறுவனத்தால் வெளிநாடுகளில் அதிக சந்தைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும்.இலங்கையில் சினோபெக்கின் திட்டம் நிறைவேற்றப்பட்டால் வெளிநாட்டில் அந்த சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு முழுமையாக சொந்தமான முதல் சுத்திகரிப்பு ஆலையாக அது மாற்றமடையும்.இந்தநிலையில் சினோபெக் மற்றும் சீனா, இந்தியாவுடன் போட்டியிட வேண்டும்.முன்னதாகவே இலங்கையின் எரிசக்தி அமைச்சர் விஜேசேகர, இலங்கையின் கிழக்கில் உள்ள திருகோணமலை எரிபொருள் தொட்டிப் பண்ணையுடன் இந்தியாவில் உள்ள நாகப்பட்டினத்தை இணைப்பது குறித்து இந்திய நிறுவன நிர்வாகிகளுடன் விவாதித்துள்ளார்.கூடிய விரைவில் சாத்தியமான குழாய்வழிக்கான உத்தியோகபூர்வ ஏற்பாடு அல்லது உடன்படிக்கையை உருவாக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று இந்திய அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே இந்தியா மற்றும் இலங்கையின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட திட்டமிடப்பட்ட சோலார் பார்க், சம்பூர் கிரவுண்ட் மவுண்ட் சோலார் திட்டம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளின் கட்டுமானத்திலும் இந்தியா ஈடுபட்டுள்ளது.திட்டம் முன்மொழிவு நிலைக்கு முன்னேறியுள்ளது, மேலும் மதிப்பீடு செய்யப்பட்டவுடன் 120 மெகாவாட் சோலார் பூங்காவில் 50 மெகாவாட் முதல் கட்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 21
Added a post  
ஈரானிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனின் ஒரு பகுதி மீள செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 2012 ஆம் ஆண்டு ஈரானிடம் எரிபொருள் இறக்குமதி செய்தமைக்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டியுள்ளது. இந்த தொகையில் 35 மில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் செலுத்தியுள்ளது.ஈரான் மீது விதிக்கப்பட்ட சர்வதேச பொருளாதாரத் தடைகள் காரணமாக கடனை மீளச் செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் எரிபொருளுக்கான கடனை தேயிலை ஏற்றுமதி மூலம் செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.பெப்ரவரி மாத இறுதி வரையில் இலங்கை அரசாங்கம் 35 மில்லியன் டொலர் கடனை மீளச் செலுத்தியுள்ளது. விரைவில் மேலும் பத்து மில்லியன் டொலர் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எண்ணெய்க்கு பதிலாக தேயிலை என்ற திட்டம் முன்மொழியப்பட்ட போதிலும், பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.000
  • 20
Added a post  
யாழ்ப்பாண சிறையில் உள்ள தனது புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாயொருவர் மீது சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளதுசிறைச்சாலையில் உள்ள மகனைப் பார்வையிடச் சென்ற வயோதிப தாய் ஒருவர் அறியாமை காரணமாக மகனுக்கு கொடுக்கவென பீடி ஒரு கட்டு எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தாயையும் மகனையும் கடுமையாகத் தாக்கி கைது செய்துள்ளனர்இது தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தாக்கப்பட்டுள்ள தாயும் மகனும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே சம்பவம் தொடர்பில் தாக்கப்பட்ட வயோதிப பெண்ணின் உறவினர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 20
List your business with TamilPoonga Business Listing.
  • 232
Added a news  
கனடியர்கள் முதலீடுகளில் நாட்டம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கனடியர்கள் மத்தியில், வரி மீளளிப்பு கொடுப்பனவுகளை முதலீடு செய்வது வெகுவாக குறைவடைந்துள்ளது.கனடிய இம்பிரியல் வர்த்தக வங்கி முன்னெடுத்த கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வரிச் செலுத்துகை மீளளிப்பு கொடுப்பனவு தொகையை முதலீடு செய்வது குறித்து வெறும் 10 வீதமான கனடியர்கள் மட்டுமே திட்டமிடுகின்றார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.கடன் செலுத்துகை, அத்தியாவசிய பொருள் கொள்வனவு போன்றவற்றுக்கு இவ்வாறு செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகளவான கனடியர்கள் ஏனைய நுகர்வு செலவுகளுக்காக இந்த தொகையை செலவிட திட்டமிட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • 209
Added a news  
ஆறு வயது சிறுவனின் உணவு முறையைப் பின்பற்றுவதாகச் சொல்லும் உலகப் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட் தனது உணவுப் பழக்கம் குறித்து பகிர்ந்த 10 தகவல்கள்.முதலீட்டாளரும் பெர்க்‌ஷயர் ஹாத்வே தலைமை நிர்வாக அதிகாரியுமான வாரன் பஃபெட், மெக்-டொனால்ட்ஸ் உணவகத்தின் பெரிய ரசிகர், வாடிக்கையாளர். தினமும் 5 கோக் கேன்களை காலி செய்பவர். நொறுக்குத் தீனிகளையும் ஐஸ்கிரீமையும் விட்டு வைக்கமாட்டார். பெர்க்‌ஷயர் முதலீட்டு நிறுவனம் சீஸ் கேண்டீஸ் மற்றும் டைரி குயீன் ஆகியவற்றின் உரிமையாள நிறுவனமாகும். இதன் ஸ்டாக் போர்ட்ஃபோலியோவில் கோககோலா மற்றும் கிராஃப்ட் ஹெய்ன்ஸ் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களும் உள்ளன. அதாவது, பெரிய முதலீட்டாளர் என்பதற்கு அடையாளமாக வாரன் பஃபெட்டின் மூலாதார முதலீட்டு மையமாக இந்த நிறுவனங்கள் இடம்பெறுவது வழக்கம்.காய் - கனிகள், மற்ற ஆரோக்கியமான உணவு வகைகளை அவரிடம் கூறினால் வெறுப்புடன் ஒதுக்கி விடுவார். உணவே மருந்து என்பதையெல்லாம் அவர் கேலி பேசக்கூடியவர். அவரால் எப்படி இந்த மாதிரி, இப்போது நாம் ‘ஜங்க்’ என்று சொல்லக் கூடிய உணவு வகைகளை, நொறுக்குத் தீனிகளை விடாமல் சாப்பிட முடிகிறது? இதற்கான விடையை அவரே வெவ்வேறு தருணங்களில் சிஎன்பிசி, ஃபார்ச்சூன், தி ஸ்னோபால் முதலான புத்தகங்கள், வெவ்வேறு மேடைகளில் அளித்திருக்கிறார்.  1. “ஆறு வயது சிறுவனின் உணவுப் பழக்கவழக்கங்களை வைத்துக் கொண்டுதான் நான் 92 வயதை அடைந்துள்ளேன். இதுவரை, அது வேலை செய்கிறது. சார்லிக்கு 99 வயதாகிறது, அவர் என்னை விட நன்றாக சாப்பிடுவதில்லை. எனக்கு ஆறு வயதாகும்போதே நான் சாப்பிட விரும்பும் அனைத்தையும் கண்டுபிடித்துக் கொண்டேன். மற்ற உணவு வகைகளைப் பார்த்து நான் ஏன் ஏமாந்து முட்டாளாக வேண்டும்?2. “ஒரு மனிதனுக்கு சந்தோஷம்தான் அதிக ஆயுளைக் கொடுக்கின்றது. நான் கோக் குடிக்கும்போது அல்லது ஹாட் ஃபட்ஜ் அல்லது ஹாட் டாக்ஸ் சாப்பிடும்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருப்பதால் ஆயுள் கூடுகின்றது.”3. “நான் ஒருநாளைக்கு 2,700 கலோரிகளை சாப்பிடுகிறேன் என்றால், அதில் கால் பங்கு கோககோலா ஆகும். நான் குறைந்தது 12 அவுன்ஸ் கொண்ட 5 கோக்குகளைக் குடிப்பேன். நான் அதை ஒவ்வொரு நாளும் செய்கிறேன். நான் பகலில் மூன்று கோக்குகளையும், இரவில் இரண்டு கோக்குகளையும் வைத்திருக்கிறேன்.”4. “நான் டயட் செயல்பாட்டு அட்டவணைகளைப் பார்த்தேன். 6 வயது மற்றும் அதற்கு உட்பட்ட வயதினரிடமே இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. அதனால் 6 வயது குழந்தை போல சாப்பிட முடிவு செய்தேன். இது நான் எடுக்கக்கூடிய பாதுகாப்பான வழி.”5. “உணவு விஷயத்தில் நான் மிகவும் எளிமையான விதியைப் பின்பற்றுகிறேன். மூன்று வயது குழந்தை சாப்பிடாத ஒன்றை நானும் சாப்பிட மாட்டேன்.” 6. “ப்ரோக்கோலி, அஸ்பாரகஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் முளைகள் ஒரு தட்டில் ஊர்ந்து செல்லும் சீன உணவைப் போல எனக்குத் தெரிகிறது. காலிஃபிளவர் கிட்டத்தட்ட என்னை நோய்வாய்ப்படுத்துகிறது. கேரட்டை நான் தயக்கத்துடன் சாப்பிடுகிறேன். எனக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிடிக்காது. நான் ருபார்ப் அருகில் கூட இருக்க விரும்பவில்லை, அது என்னை எரிச்சலடையச் செய்கிறது.7. “மீட்டிங்கின்போது, சார்லியும் நானும் ஒரு என்.எஃப்.எல் லைன்மேனின் வாராந்திர கலோரி தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான கோக், சீயின் ஃபட்ஜ் மற்றும் சீயின் உடைந்த வேர்க்கடலையை உட்கொள்வோம். நீண்ட காலத்திற்கு முன்பு நாங்கள் ஒரு அடிப்படை உண்மையைக் கண்டுபிடித்தோம்:8. “நாம் செய்யும் காரியத்திலிருந்து எப்படி மகிழ்ச்சியைப் பெறுவது அல்லது மகிழ்ச்சியாகச் செய்வது என்பது பற்றி ஏகப்பட்ட விஷயங்கள் பேசப்பட்டு விட்டன. நான் என் வாழ்நாள் முழுவதும் ப்ரோக்கோலி மற்றும் பிரஸ்ஸல்ஸ் முளைகளை சாப்பிட்டிருந்தால், நான் நீண்ட காலம் வாழ்ந்திருப்பேன் என்று நினைக்கவில்லை.9. “கோக கோலா குடிப்பதை ஹோல் ஃபுட்ஸில் யாராவது எனக்கு விற்கும் விஷயத்துடன் ஒப்பிடும்போது - ஹோல் ஃபுட்ஸில் உள்ளவர்களின் முகத்தில் புன்னகையை நான் ஒருபோதும் காணவில்லை. ஒரே பொருளை மீண்டும் மீண்டும் சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து 50 நாட்கள் தினமும் காலை உணவாக ஒரு ஹாம் சாண்ட்விச்சை என்னால் சாப்பிட முடியும்.” 10. “நான் எந்த சீன உணவுகளையும் உண்பதில்லை. தேவைப்பட்டால் சாதம் எடுத்துக் கொள்வேன். அதையும் என் தட்டில் சுற்றிவர நகர்த்திக் கொண்டே இருப்பேன். பிறகு அறைக்குச் சென்று வேர்க்கடலை சாப்பிடுவேன்.” 
  • 212
Chennai Super Kings move to 3rd place after game with SRH. Super Kings win by 7 wickets.
  • 223
Added article  
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில் இவரின் கால்ஷூட்டுக்காக பல நடிகர்கள் காத்திருந்தார்கள். ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் சம்பளம் என பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர் இவர்தான்,பல நூறு படங்களில் தனியாக காமெடி ட்ராக் செய்து வந்த கவுண்டமணி 90களில் ஹீரோக்களோடு சேர்ந்து படம் முழுக்க வரும் கதாபாத்திரங்களில் நடித்தார். சத்தியராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார் என பலருடனும் இணைந்து இவர் செய்த காமெடியை சினிமா ரசிகர்கள் அப்படி ரசித்தார்கள்.அவர்களோடு மட்டுமில்லாமல் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரோடும் பல படங்களில் கவுண்டமணி நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். செந்திலுடன் இணைந்து கவுண்டமணி நடித்த காமெடி காட்சிகள்தான் பல திரைப்படங்களை ஓட வைத்தது. கரகாட்டக்காரன் படத்திற்கு முக்கிய காரணம் கவுண்டமணி – செந்திலின் காமெடி காட்சிகள்தான்.கவுண்டமணியை சினிமாவில் தூக்கிவிட்டவர் பாக்கியராஜ் என்பது பலருக்கும் தெரியாது. இருவரும் ஒரே ஊர் காரார்கள். பாக்கியராஜ் சென்னைக்குவந்து நடிகராக வேண்டும், இயக்குனராக வேண்டும் என முயற்சி செய்து பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தபோது கவுண்டமணி நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் இருந்த கவுண்டமணியை பாரதிராஜாவிடம் அறிமுகம் செய்து வைத்து பதினாறு வயதினிலே படத்தில் ரஜினியோடு வரும் காட்சிகளில் நடிக்க வைத்தவர் பாக்கியராஜ்தான். அதேபோல், அடுத்து பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தில் கவுண்டமணிக்கு படம் முழுக்க வரும் வேடத்தையும் வாங்கி கொடுத்தார்.சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய பாக்கியராஜ் ‘படத்தின் டைட்டிலில் கவுண்டமணியின் பெயரை போட வேண்டும் என நினைத்தேன். அவரை மணி-யாக மட்டுமே எனக்கு தெரியும். ‘அவர் முழுபேர் என்னப்பா?’ என கேட்டபோது ‘கவுண்டமணி’ என சொன்னார்கள். நானும் அப்படியே எழுதி கொடுத்துவிட்டேன்.அதன்பின்னர்தான் அவரின் பெயர் ‘கவுண்ட்டர் மணி’ என சொன்னார்கள். நாடகங்களில் நடிக்கும்போது இல்லாத வசனத்தை கூட கவுண்ட்டராக கொடுத்து அசத்திவிடுவாராம். அதனால் அந்த பெயர் என சொன்னார்கள். ஆனால், அதற்குள் படமே வெளியாகி அவரின் பெயர் ‘கவுண்டமணி’ என வந்துவிட்டது. அதன்பின் அதுவே அவரின் பெயராகவும் மாறிவிட்டது’ என பாக்கியராஜ் கூறினார்.
  • 370
Added a post  
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, சித்திரை மாதம் 16 ஆம் தேதி மேஷம் -ராசி: அரசு தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்திப் பாராட்டுகளை பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அளவுடன் இருக்கவும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பொறுமை வேண்டிய நாள்.  அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைரிஷபம் ராசி: பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் விரயம் உண்டாகும். மறைமுகமான சில தடைகளால் காலதாமதம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பும், அலைச்சலும் உண்டாகும். உயர் கல்வி குறித்த செயல்பாடுகளில் பொறுமை காக்கவும். மனதில் வித்தியாசமான கற்பனைகள் மேம்படும். பூர்வீக சொத்து சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.  அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்மிதுனம் -ராசி: தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.   அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு கடகம் -ராசி: திடீர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். போட்டி நிறைந்த நாள். சிம்மம் -ராசி:குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். பொன், பொருட்சேர்க்கை குறித்த எண்ணம் மேம்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.   அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை கன்னி -ராசி: ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். வீடு மாற்றம் குறித்த எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். பயணத்தில் மிதவேகம் நல்லது. சமூகப் பணிகளில் தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.   அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்துலாம் -ராசி: உடன்பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். மனதில் இருக்கும் எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விளையாட்டு சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.   அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஊதாவிருச்சிகம்- ராசி: பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பத்தினர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். உயர்நிலை கல்வியில் சாதகமான சூழல் அமையும். எதிர்பாராத சில தனவரவுகளின் மூலம் மேன்மை ஏற்படும். அடமானப் பொருட்களை மீட்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.   அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் தனுசு -ராசி: எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனை உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகப் பணிகளில் மற்றவரை எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்கள் பற்றிய கவலை அதிகரிக்கும். வியாபாரத்தில் இடமாற்றம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.   அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் மகரம் -ராசி:தந்தை வழி உறவினர்களால் அலைச்சலும், அனுகூலமும் உண்டாகும். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்லவும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். தான, தர்மம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். குடியுரிமை பிரச்சனைகளால் விரயம் உண்டாகும். கீர்த்தி நிறைந்த நாள்.  அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்கும்பம் –ராசி:சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சி அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.   அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மீனம் -ராசி: நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வீடு பராமரிப்பு தொடர்பான பணிகள் நிறைவேறும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். மருத்துவத் துறைகளில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.   அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 401
Added a post  
தென்மராட்சி மீசாலை என்றாலே மாம்பழமும்,பலாப்பழமுமே சட்டென்று நினைவில் வரும். பலாப்பழ சீசன் தொடங்கியதும் மீசாலை களை கட்டத் தொடங்கி விடும். அண்மைக்காலங்களாக மீசாலை ஐயா கடையடி பலாப்பழம் விற்கும் இடமாக மாறியுள்ளது.உள்ளூர் பலாப்பழ பிரியர்களும் ,தென்னிலங்கை வியாபாரிகளும், வெளிநாட்டு வாசிகளும் இவ்விடத்தில் வந்து பலாப்பழத்தை வாங்கி செல்கின்றனர்.வைகாசி,ஆனி,ஆடி மாதம் வரை மீசாலை ஐயா கடை பலாப்பழ வாசம் வீசிய படி ஒவ்வொருவரையும் சுண்டி இழுக்கிறது.
  • 400
Added a video  
எல்லா விலங்குகளிடமும் மனிதன் கற்றுக் கொள்ள ஏதோ ஒரு விஷயம் இருக்கும் அந்த வரிசையில் ஓநாய்களிடம் மனிதன் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
  • 411
Added a post  
கவனிக்கவும்:பயன்படுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்* சளிக் காய்ச்சல்புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.* இருமல், தொண்டை கரகரப்புபாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.* சளிபூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.* டான்சில்வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.* வயிற்றுப் போக்குசிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.* வாயுக் கோளாறுமிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.* நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.* தலைவலிஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.* தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.* தொடர் விக்கல்நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.* வாய் நாற்றம்சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.* உதட்டு வெடிப்புகரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.* அஜீரணம்ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.* குடல்புண்மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.* வாயு தொல்லைவேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.* வயிற்று வலிவெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.* மலச்சிக்கல்செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.* சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.* பித்த வெடிப்புகண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.* மூச்சுப்பிடிப்புசூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.* சரும நோய்கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.*தேமல்வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.*மூலம்கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.* தீப்புண்வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.* மூக்கடைப்புஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.* வரட்டு இருமல்எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.கவனிக்கவும்:பயன்படுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்
  • 418
  • 415
Added a post  
ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 28.4.2024 சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 07.06 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று அதிகாலை 03.21 வரை கேட்டை. பின்னர் மூலம்.  பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 442
Added a video  
இந்த கப்பல் உலகின் மிகப்பெரியது.. 2 பில்லியன் டாலர்கள் மிதக்கும் ரிசார்ட். 2026 வரை முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டது.
  • 442
Added a post  
1792: ஆஸ்திரிய நெதர்லாந்து (தற்போதைய பெல்ஜியம்) மீது பிரான்ஸ் படையெடுத்தது.1876 – பிரித்தானிய இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.1920: சோவியத் யூனியனுடன் அஸர்பைஜான் இணைக்கப்பட்டது.1930: முதலாவது இரவுநேர கூடைப்பந்தாட்டப்போட்டி அமெரிக்காவின் கான்ஸாஸ் நகரில் நடைபெற்றது.  1932: மனிதர்களின் மஞ்சள் காமாலை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.1945: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியும் அவரின் காதலியும் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டனர்.1952: இரண்டாவது சீன – ஜப்பானிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சீன – ஜப்பானிய சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.1969: பிரெஞ்சு ஜனாதிபதி சார்ள்ஸ் டி கோல் ராஜினாமா செய்தார்.1970: வியட்நாமில் கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடுவதற்கு அமெரிக்கத் துருப்புகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் அதிகாரிமளித்தார்.1978: ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மொஹமட் தாவூத் கான், கம்யூனிஸ்ட் சார்பு கிளர்ச்யாளர்களால் சதிப்புரட்சியொன்றில் பதவி கவிழ்க்கப்பட்டு, கொல்லப்பட்டார்.1995: பலாலியில் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது.1996 – அவுஸ்திரேலியா, தாஸ்மேனியாவில் "மார்ட்டின் பிறையன்ட்" என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டு 37 பேர் காயமடைந்தனர்.2000 – இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.2005 – இலங்கை ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
  • 451
changed a profile cover  
  • 421
  • 422
  • 422